மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி... விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு...

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி சம்பந்தமான விளக்க அறிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி 

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி... விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு...
மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த கோரிய வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை தெளிவற்ற முறையில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இது சம்மந்தமாக தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை தெளிவற்று இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்பது குறித்தும், அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்கள் குறித்தும், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.